புல்வாமா தாக்குதலின் பதற்றம் தணிவதற்குள் காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் - எல்லைப் பகுதியில் இந்திய வீரர்கள் பதிலடி
Feb 20 2019 6:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புல்வாமா தாக்குதலால் ஏற்பட்ட பதற்றம் தணிவதற்குள் காஷ்மீர் எல்லைப் பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம், அத்துமீறித் தாக்குதல் நடத்தியது.
காஷ்மீர் மாநிலம் ரஜவுரி மாவட்டத்தின் நவுஷெரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சிறிய ரக பீரங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு இந்திய வீரர்கள் உரிய பதிலடி கொடுத்தனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து மீறி வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து, ஜம்மு பிராந்தியத்தில் தொடர்ந்து அந்நாட்டு ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் 2 ஆயிரத்து 936 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.