எரிக்‍சன் நிறுவனத்திற்கு 550 கோடி ரூபாய் திருப்பி செலுத்தாத வழக்‍கு - அனில் அம்பானி குற்றவாளி என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Feb 20 2019 2:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

எரிக்‍சன் இந்தியா நிறுவனத்திற்கு 550 கோடி ரூபாய் திருப்பி செலுத்தாத வழக்‍கில் அனில் அம்பானி குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், 4 வாரங்களுக்‍குள் நிலுவைத் தொகையை வழங்கவில்லை என்றால், சிறை செல்ல நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.

எரிக்‍சன் இந்தியா நிறுவனத்திற்கு, ரிலையன்ஸ் தொலைதொடர்பு நிறுவனம் திருப்பி செலுத்த வேண்டிய 550 கோடி ரூபாயை வழங்குவதற்காக, அனில் அம்பானியின் ஆர்காம் நிறுவன சொத்துகள், முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்திற்கு விற்கப்பட்டன. இருந்தபோதும் எரிக்‍சன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை ரிலையன்ஸ் தொலைதொடர்பு நிறுவனம் வழங்கவில்லை. இது தொடர்பாக, ரிலையன்ஸ் தொலைதொடர்பு நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி மீது எரிக்‍சன் இந்தியா சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டது. வழக்‍கு விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் தொலைதொடர்பு நிறுவனத்தின் இயக்‍குனர்கள் 2 பேரும் குற்றவாளிகள் என நீதிபதிகள் நாரிமன் மற்றும் வினீத் சரன் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. எரிக்சன் நிறுவனத்திற்கு 4 வாரங்களுக்‍குள் 453 கோடி ரூபாயை திருப்பி செலுத்த வேண்டும் என்றும், தவறினால் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00