மத்திய அரசின் திறமையின்மையால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
Feb 21 2019 1:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் திறமையின்மை காரணமாக தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், பா.ஜ.க தலைவர்களின் தவறான நடவடிக்கைகளால் நாடு சிறுமை படுத்தப்படுவதாகவும் ஆந்திர முதலமைச்சர் திரு. சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் புல்வாமா தாக்குதல் நடந்தது குறித்து செல்வி மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் சந்தேகம் தெரிவித்திருந்தார். தேர்தலுக்கு முன்னர் இதுபோன்ற தாக்குதல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக, கடந்த 8-ம் தேதியே உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும், வீரர்களின் 78 வாகனங்கள் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டது ஏன் என்றும், 5 ஆண்டுகளாக பாகிஸ்தான் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், மத்திய அரசின் திறமையின்மை காரணமாகவே புல்வாமா தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும், அரசியல் ஆதாயங்களுக்காக ராணுவத்துடன் விளையாடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் திரு. சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பா.ஜ.க தலைவர்களின் தவறான நடவடிக்கைகளால் நாடு சிறுமை படுத்தப்படுவதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.