ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் பலி - 5-க்கும் மேற்பட்ட வீரர்களை தேடும் பணி தீவிரம்
Feb 21 2019 5:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் உயிரிழந்தார். 5-க்கும் மேற்பட்ட வீரர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
ஹிமாச்சலப்பிரதேச மாநிலம் கின்னார் மாவட்டத்தில் நம்கியா எனும் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். 5-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பனிச்சரிவில் சிக்கி இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையைச் சேர்ந்த வீரர்கள் சிலரும் காயமடைந்தனர். பனிச்சரிவில் சிக்கிய வீரர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 5 பேரின் விவரங்கள் தெரியவில்லை என துணை ஆணையர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த வீரர், பிலாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராகேஷ் குமார் என்பது தெரியவந்தது. Shipki La எல்லைச் சோதனைச்சாவடியில் குடிநீர் இணைப்பை சரிசெய்யும் நடவடிக்கையின்போது ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் வீரர்கள் சிக்கியது குறிப்பிடத்தக்கது.