துணை ராணுவப்படை வீரர்கள், விடுப்பில் செல்லும்போதும், பணிக்கு திரும்பும் போதும் விமானத்தில் பயணிக்க சலுகை - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

Feb 21 2019 5:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஷ்மீரில் பணியாற்றும் துணை ராணுவப்படை வீரர்கள், விடுப்பில் செல்லும்போதும், மீண்டும் பணிக்கு திரும்பும் போதும் விமானத்தில் பயணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் சலுகை அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 14ம் தேதியன்று, துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து, தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்‍குதலில், 40க்‍கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், காஷ்மீரில் பணிபுரியும் காவலர் முதல் உதவி ஆய்வாளர் நிலையிலுள்ள துணை ராணுவத்தினருக்கு விமான பயண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், டெல்லி - ஸ்ரீநகர், ஸ்ரீநகர் - டெல்லி, ஸ்ரீநகர் - ஜம்மு செக்டார் பகுதிகளில், துணை ராணுவ வீரர்கள், விமானத்தில் பயணிக்க அனுமதி வழங்கப்படுவதாகவும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

வீரர்களின் பாதுகாப்பு கருதி அறிவிக்‍கப்பட்டுள்ள இந்த சலுகையின் மூலம் 7 லட்சத்து 80 ஆயிரம் துணை ராணுவ படை வீரர்கள் பயனடையவுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00