மக்களவைத் தேர்தலையொட்டி, உத்தரப்பிரதேசத்தில் தொகுதி பங்கீடு - சமாஜ்வாடி 37 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 38 இடங்களிலும் போட்டி
Feb 21 2019 5:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப்பிரதேசத்தில், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இடையேயான தொகுதி பங்கீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மக்களவை தேர்தலில், உத்தரப்பிரதேசத்தில், திரு. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடியும், செல்வி மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக கடந்த மாதமே அறிவித்தனர். இந்நிலையில், இன்று தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகிவுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 மக்களவை தொகுதிகளில், சமாஜ்வாடி கட்சி 37 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 38 இடங்களிலும், மற்றுமொரு கூட்டணி கட்சி 3 இடங்களிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொகுதிகள் குறித்த தகவலும் வெளியாகிவுள்ளது. திருமதி. சோனியா காந்தியின் ரேபரேலி, திரு. ராகுல் காந்தியின் அமேதி ஆகிய தொகுதிகளில் காங்கிரசுக்கு எதிராக போட்டியில்லை என்றும், பிரதமர் திரு. மோடியின் வாரணாசி தொகுதியில் பா.ஜ.க.வுக்கு எதிராக சமாஜ்வாடி போட்டியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வி மாயாவதியின் பகுஜன் சமாஜுடன், சமாஜ்வாடி கட்சி கூட்டணி வைத்துள்ளதற்கு, திரு. அகிலேஷ் யாதவின் தந்தை திரு. முலாயம் சிங் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.