மிஷன் சக்தி தொடர்பான பிரதமர் மோடியின் உரை - தேர்தல் விதிமீறல் உள்ளதா? என தேர்தல் ஆணையம் ஆய்வு
Mar 28 2019 11:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மிஷன் சக்தி தொடர்பான பிரதமர் மோடியின் உரையில் தேர்தல் விதிமீறல் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயல்படும் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் மிஷன் சக்தியை வெற்றிகரமாக இந்தியா சோதனை செய்துள்ளதாகவும், முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் இந்தச் சாதனையை படைத்துள்ள விஞ்ஞானிகளைப் பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார். மோடியின் இந்த உரை குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகள், அதுகுறித்து தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்துள்ளன.
இந்நிலையில், பிரதமரின் உரையில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்காக பிரத்யேக அதிகாரிகள் குழுவை நியமித்து அவர்களின் நேரடி கண்காணிப்பில் பிரதமரின் உரை உடனடியாக ஆய்வு செய்யப்படும் என்றும், அதில் மோடியின் உரையில் தேர்தல் விதிமுறை மீறல் உள்ளதா என ஆராயப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.