பணி ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டது செல்லும் - தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

Apr 12 2019 3:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

பணி ஓய்வு பெற்ற காவல்துறை ஐஜி திரு. பொன் மாணிக்கவேல், சிலைக்‍ கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பணி ஓய்வு பெற்ற காவல்துறை ஐஜி திரு. பொன் மாணிக்கவேலை, சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓராண்டுக்கு நியமனம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. திரு. பொன் மாணிக்கவேலை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்த சென்னை நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் என தெரிவித்த நீதிபதிகள், தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். சிலைக்‍ கடத்தல் தடுப்பு கூடுதல் அதிகாரியாக நியமிக்‍கப்பட்ட அபய்குமார் சிங், பணியில் நீடிக்‍கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையையும் உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00