மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைவது உறுதி - ஆர்.எஸ்.எஸ். இயக்கமே பா.ஜ.க.வை ஆதரிப்பதை நிறுத்திவிட்டதாகவும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி பேச்சு
May 14 2019 5:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பா.ஜ.க. இந்த தேர்தலில் தோல்வி அடைவது உறுதி எனவும், ஆர்.எஸ்.எஸ். இயக்கமே பா.ஜ.க.வை ஆதரிப்பதை நிறுத்தி விட்டதாக தோன்றுவதாகவும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் செல்வி மாயாவதி தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. அரசை, மூழ்கும் கப்பல் என விமர்சித்துள்ள செல்வி.மாயாவதி, பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் பொதுமக்களின் போராட்டங்கள் காரணமாக, அக்கட்சியின் சுய விளம்பரங்கள் பலனளிக்கவில்லை எனவும் தெரிவித்தார். மேலும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கும், பா.ஜ.க.விற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் இந்த தேர்தலில் பணியாற்றாததே இதற்கு சான்று எனவும் செல்வி மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.