இந்து மதம் குறித்து கமல்ஹாசன் பேசியது தொடர்பான வழக்கு - தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

May 15 2019 12:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத உணர்வை தூண்டும் வகையில் பேசிய கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி, பா.ஜ.க வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர்தான் காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே என்றும் பேசினார். இதற்கு பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

எனவே, மத உணர்வை தூண்டும் வகையில் பேசியதாக கமல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி பா.ஜ.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினிகுமார் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு தொடர்ந்தார். இந்த வழக்‍கு இன்று விசாரணைக்‍கு வந்தது. அப்போது அதனை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் ஆணையம் இதுகுறித்து அளித்த விளக்‍கத்தை ஏற்று இந்த வழக்‍கை தள்ளுபடி செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00