மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு : இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம்
May 20 2019 5:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஊடகங்களில் வெளியான நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன.
இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை உயர்வுடன் தொடங்கிய நிலையில், தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து 400 புள்ளிகள் உயர்ந்து, 39 ஆயிரத்து 331 புள்ளிகளாகவும், தேசிய பங்குசந்தையான நிஃப்டி 410 புள்ளிகள் அதிகரித்து 11 ஆயிரத்து 819 புள்ளிகளாகவும் இருந்தன. ஒரே நிமிடத்தில் 3 லட்சத்து 20 ஆயிரம் கோடி முதலீடும் குவிந்துள்ளது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 79 காசுகள் உயர்ந்து 69 ரூபாய் 44 காசுகளாக இருந்தது.
அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போரால் பங்குச்சந்தைகளில் ஏற்ற இறக்கம் இருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்த நிலையில், மக்களவை தேர்தல் கருத்துக்கணிப்புகள் ஊடகங்களில் வெளியான நிலையில் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.