சபரிமலை விவகாரம் வெற்றிக்‍கு பாதிப்பாக இருக்‍காது - கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி மாபெரும் வெற்றி பெறுவோம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

May 20 2019 6:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை விவகாரத்தால் தேர்தலில் தங்களுக்‍கு மக்‍களின் ஆதரவு எந்தவிதத்திலும் குறையவில்லை என்றும், கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி மாபெரும் வெற்றி பெறுவோம் எனவும், அம்மாநில முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலின் 7-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. கேரளாவை பொறுத்தவரை, காங்கிரஸ் கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர் திரு.பினராயி விஜயன், கருத்துக்‍கணிப்புகளை பொய்யாக்கி, கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மாபெரும் வெற்றி பெறும் என தெரிவித்தார். சபரிமலை விவகாரத்தில் பிரச்சனைகளை உருவாக்கியது யார் என்பது மக்களுக்கு தெரியும் என கூறிய திரு.பினராயி விஜயன், இந்த விவகாரம் தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எனவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00