ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் ஆலோசனை
May 22 2019 11:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்தியில் ஆட்சியமைப்பது தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் திரு. சந்திரபாபு, மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஆந்திர முதலமைச்சரும், தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான திரு. சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி, திருமதி சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை ஏற்கனவே அவர் சந்தித்தார். நேற்று கொல்கத்தா சென்ற திரு. சந்திரபாவு நாயுடு, முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இருவரும் சுமார் 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர். எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பது பற்றி அவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது.