100 சதவிகித ஒப்புகைச் சீட்டு ஒப்பீட்டு அடிப்படையில் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் - தொழில்நுட்ப வல்லுநர்களின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்
May 21 2019 5:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்களவைத் தேர்தலில், 100 சதவிகித ஒப்புகைச் சீட்டு ஒப்பீட்டு அடிப்படையில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்ற தொழில்நுட்ப வல்லுநர்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் உறுதி செய்துகொள்ளும் வகையில், ஒப்புகைச் சீட்டு வழங்கும் VVPAT இயந்திரம், நாடு முழுவதும் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் பொருத்தப்பட்டிருந்தன. இதனிடையே, வாக்கு எண்ணிக்கை முழுவதையும், 100 சதவிகிதம், ஒப்புகைச் சீட்டு ஒப்பீட்டு அடிப்படையில் நடத்த வேண்டும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. வாக்குகளை ஒப்புகைச்சீட்டுடன் 100 சதவிகிதம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பது நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 5 சதவிகித ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு வாக்குகளை எண்ண வேண்டும் என, உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.