உச்சநீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு - 27 பேராக இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 31 ஆக உயர்வு
May 22 2019 5:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உச்சநீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகளை நியமனம்செய்து குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
ஹிமாச்சலப்பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி திரு. சூர்யகாந்த், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற நீதிபதி திரு. அனிருத்தா போஸ், கவுகாத்தி உயர்நீதிமன்ற நீதிபதி திரு. போபண்ணா, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. கவாய் ஆகிய 4 பேரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். 4 புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் உள்ள 31 நீதிபதிகள் பணியிடமும் நிரப்பப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் நாளை மறுதினம் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.