ஷாங்காய் மாநாட்டிற்கு செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக செல்லாது - மத்திய வெளியுறவுத்துறை அறிவிப்பு
Jun 12 2019 4:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநட்டில் பங்கேற்க செல்லும் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் விமானம் பாகிஸ்தான் வான் வழியாக செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு, கிர்கிஸ்தான் நாட்டின் பிஸ்கெக் நகரில் வரும் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க, பிரதமர் திரு. மோடி, தனி விமானம் மூலம் பாகிஸ்தான் வான் எல்லை வழியாக கிர்கிஸ்தான் செல்ல உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. இதற்கு அனுமதி வழங்க பாகிஸ்தான் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஏற்றுக்கொண்டதாகவும், மோடியின் விமானம், தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் வான்பரப்பில் பறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக கிர்கிஸ்தான் செல்லாது என்றும், ஓமன் வழியாக செல்லும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.