சந்திரயான்-2 விண்கலத்தை ஜூலை மாதம் 15-ம் தேதி விண்ணில் செலுத்த திட்டம் - இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி
Jun 12 2019 4:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சந்திரயான்-2 விண்கலம், அடுத்த மாதம் 15ம் தேதி காலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் திரு. சிவன் தெரிவித்துள்ளார்.
இந்தியா முதன்முறையாக நிலவிற்கு, சந்திரயான்-1 விண்கலத்தை கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் அனுப்பியது. இந்த விண்கலம் நிலவிலுள்ள சூழல்கள், கனிமங்கள் குறித்து ஆய்வு செய்தது. 2009-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சந்திரயான் ஒன்றின் ஆயுட்காலம் முடிவடைந்தது. தற்போது சந்திரயான்-2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. சந்திரயான்-2 விண்கலம் ஜூலை மாதம் 15-ம் தேதி காலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் திரு. சிவன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சந்திரயான்-2ல் கொண்டு செல்லப்படவிருக்கும் லேண்டர் மற்றும் ரோவர் கருவிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.