மேற்குவங்கத்தில் மருத்துவர்களின் போராட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் தூண்டுதலே காரணம் -முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
Jun 14 2019 11:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்குவங்கத்தில் மருத்துவர்களின் போராட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் தூண்டுதலே காரணம் என முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்குவங்க மாநிலம் என்.ஆர்.எஸ். மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, 2 மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அம்மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட வார்டுகளில் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் போராட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் தூண்டுதலே காரணம் என அம்மாநில முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டுமென அம்மாநில ஆளுநர் கேசரி நாத் திரிபாதி வலியுறுத்தியுள்ளார்.