ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கிடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு - முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை
Jun 14 2019 12:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் திரு.நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் Bishkek-ல், ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதற்காக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் பிரதமர் திரு.நரேந்திர மோடி கிர்கிஸ்தான் சென்றுள்ளார்.
மாநாட்டிற்கிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் திரு.நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
அப்போது, பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இருவரும் பேசிக்கொண்டதாக தெரிகிறது. அத்துடன், இருதரப்பு உயர்மட்ட அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.
இதேபோல், அஃப்கனிஸ்தான் அதிபர் Ashraf Ghani-ஐ பிரதமர் திரு.நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
முன்னதாக, மாநாட்டை யொட்டி, சீன அதிபர் Xi Jinping-ஐ, பிரதமர் திரு.நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இருநாடுகளிடையேயான நட்புறவு, பொருளாதார ஒத்துழைப்பு, கலாச்சார மேம்பாடு ஆகியன குறித்து இரு தலைவர்களும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.