மேற்குவங்க மருத்துவர்கள் போராட்டம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை - போராட்டத்தை முடிவுக்குக்கொண்டுவர மருத்துவமனை நிர்வாகிகளுடன் நாளை மம்தா பேச்சுவார்த்தை
Jun 17 2019 3:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்குவங்க மருத்துவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை மருத்துவர்கள் தொடங்கி உள்ளனர். இதனால் நாடு முழுவதும் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவ கல்லூரியில் அண்மையில் மருத்துவர்கள் தாக்கப்பட்டனர். இதனை கண்டித்து அம்மாநில மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.
இதனையடுத்து, மேற்குவங்க மாநில முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி, சமாதான பேச்சுவார்த்தை நடத்த மருத்துவர்களுக்கு அழைத்தார். இதற்கு ஒத்துக்கொண்ட மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
இந்த நிலையில் மேற்குவங்க மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடுதழுவிய போராட்டத்தை மருத்துவர்கள் தொடங்கி உள்ளனர். டெல்லி, ராஜஸ்தான், குஜராத், மாநிலங்களில் மருத்துவர்கள் தங்கள் பணிகளை புறக்கணித்து, போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால், அம்மாநிலங்களில் மருத்துவ பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.