கர்நாடகாவில், தள்ளுபடி செய்யப்பட்ட விவசாய கடன்களை பிடித்தம் செய்த தேசிய வங்கிகள் - மக்‍களவைத் தேர்தலுக்‍குப் பிறகு மத்திய அரசு தந்திரமாக செயல்பட்டதாக பாதிக்‍கப்பட்ட விவசாயிகள் குற்றச்சாட்டு

Jun 14 2019 6:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்‍களவை தேர்தல் முடிவடைந்த நிலையில், கர்நாடகாவில், விவசாயக்‍ கடன் தள்ளுபடி செய்யப்பட்ட சுமார் 14 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்‍கில் இருந்து அந்த தொகை திரும்ப எடுக்‍கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு முன்னர், கடந்த ஏப்ரல் மாதம், கர்நாடக மாநிலத்தை விவசாயிகளின், 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவிலான விவசாய கடன்களை அம்மாநில அரசு தள்ளுபடி செய்தது. இந்நிலையில் கடந்த 3-ம் தேதி, 13 ஆயிரத்து 988 விவசாயிகளின் வங்கி கணக்‍கில் இருந்து, கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை திரும்ப எடுக்‍கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், தேர்தலுக்கு முன்பாக விவசாய கடன் தள்ளுபடி என நிதி வழங்கிய முதலமைச்சர் திரு. குமாரசாமி அரசு, தேர்தல் முடிந்த பிறகு அந்த பணத்தை திரும்ப எடுத்துக் கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் திரு. குமாரசாமி இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளே விவசாயிகளின் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தகுதி வாய்ந்த விவசாயிகளுக்‍கு, கடன் தள்ளுபடி செய்ததாகவும், தகுதியற்றவர்கள் பெற்ற தள்ளுபடி தொகையை, அவர்களது வங்கி கணக்‍கில் இருந்து திரும்ப எடுத்துக்‍ கொண்டதாகவும் வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00