டெல்லியில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது மகனை போலீசார் சரமாரியாகத் தாக்‍கிய சம்பவம் - காவல்துறையைக்‍ கண்டித்து போராட்டம்

Jun 18 2019 5:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் ஆட்டோ ஓட்டுநரையும் அவரது மகனையும் போலீசார் சரமாரியாகத் தாக்‍கினர். இதனைக்‍ கண்டித்து, பொதுமக்‍கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லியில் முகர்ஜி நகர் என்ற இடத்தில் போலீஸ் வாகனமும் ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளானது. அதை தொடர்ந்து நடந்த வாக்குவாதத்தில் ஆட்டோ ஓட்டுநரையும், அவரது மகனையும் காவல் அதிகாரிகள் சரமாரியாக தாக்கினர். ஆட்டோ ஓட்டுநரை சாலையில் தரதரவென இழுத்துச் சென்ற காவலர்கள் காலால் உதைத்தனர். சீக்கிய சமூகத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தாக்‍கப்பட்டதால் ஆத்திரமடைந்த அந்த சமூகத்தை சேர்ந்த மக்‍கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆட்டோ ஓட்டுனரை கண்மூடித்தனமாக தாக்‍கிய போலீசார் மீது நடவடிக்‍கை எடுக்‍க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன முழக்‍கங்களை எழுப்பினர். இதனையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது மகன் மீது தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறை உதவி ஆய்வாளர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00