நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து பிரதமர் நரேந்திரமோடி 22-ம் தேதி, பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை - உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்தும் கருத்து கேட்பு
Jun 20 2019 11:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு அதிகரிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக வரும் 22ம் தேதி, பிரதமர் திரு. மோடி பொருளாதார நிபுணர்களை சந்திக்க உள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் திரு. மோடி, நாளை விருந்தளிக்கிறார். டெல்லியில் உள்ள அஷோகா ஒட்டலில் இரவு விருந்தில் பங்கேற்க, அனைத்து எம்.பி.க்களுக்கும் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, வரும் 22ம் தேதி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு அதிகரிப்பு உள்ளிட்டவை குறித்து பொருளாதார நிபுணர்களை சந்தித்து, பிரதமர் மோடி ஆலோசிக்க உள்ளார். நிதி ஆயோக் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இக்கூட்டத்தில் நிதி ஆயோக் அதிகாரிகள், அமைச்சர்கள், பொருளாதார நிபுணர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஜூலை 5ம் தேதி, மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் இக்கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.