மக்களவை சபாநாயகராக, பா.ஜ.க. எம்.பி. ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு - பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
Jun 20 2019 4:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்களவை புதிய சபாநாயகராக, பா.ஜ.க. எம்.பி. திரு. ஓம் பிர்லா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பிரதமர் திரு. மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் கூடியது. இன்று மக்களவையின் புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த திரு. ஓம் பிர்லாவின் பெயரை பிரதமர் திரு. மோடி முன் மொழிந்தார். மக்களவையில் பாரதிய ஜனதா தனிப் பெரும்பான்மையுடன் இருப்பதால், சபாநாயகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரு. ஓம் பிர்லா, போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மக்களவைத் தொகுதியிலிருந்து மூன்றாவது முறையாக அவர் வெற்றிபெற்றார். ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.