ஆந்திராவில் காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படும் - முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு
Jun 19 2019 6:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆந்திராவில் இனி காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் திரு.ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநில முதல்வராக திரு.ஜெகன் மோகன் ரெட்டி பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில் முதல் கோப்பாக சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஆஷா பணியாளர்களின் ஊதியத்தினை 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தினார். இந்நிலையில் தற்போது ஆந்திர காவல்துறையில் உள்ள காவலர் முதல் ஆய்வாளர் வரை அனைவருக்கும் வார விடுமுறை வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளார். புதிய அறிவிப்பின்படி ஆந்திர காவல்துறையைச் சேர்ந்த தலைமை காவலர்கள், காவலர்கள் என அனைவருக்கும் வார விடுமுறை அளிக்கப்படும் என்றும், இதன் மூலம் 67 ஆயிரத்து 804 பேர் பயன்பெற முடியும் என்றும் இந்த திட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.