'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் தொடர்பாக ஆலோசனைகளை வழங்க குழு அமைப்பு - எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி பிரதமர் நரேந்திர மோடி முடிவு
Jun 20 2019 6:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் தொடர்பாக ஆலோசனைகளை வழங்க குழு ஒன்றை அமைக்க பிரதமர் திரு.நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற உத்தேசத் திட்டம் குறித்து விவாதிக்க, பிரதமர் திரு. நரேந்திரமோடி தலைமையில் டெல்லியில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை காங்கிரஸ், திரிணாமுல், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனாவும் இந்த கூட்டத்தை புறக்கணித்தது.
அதேசமயம், தேசியவாத காங்கிரஸ் தலைவர் திரு. சரத்பவார், பீஹார் முதலமைச்சர் திரு. நிதிஷ்குமார், சிரோமணி அகாலிதளக் கட்சித் தலைவர் திரு. சுக்பிர் சிங் பாதல், காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் டாக்டர் Farooq Abdulla, மக்கள் ஜனநாயக் கட்சித் தலைவர் Mehbooba Mufti, ஒடிஷா முதலமைச்சர் திரு. நவீன் பட்நாயக், தேசிய மக்கள் கட்சித் தலைவர் திரு. Conard Sangma, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் திரு. சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் திரு. D. ராஜா, ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். ஆனாலும், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை தாங்கள் கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்தனர்.
இக்கூட்டத்தின் முடிவில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்'
திட்டம் தொடர்பாக ஆராய குழு ஒன்றை அமைக்க பிரதமர் திரு.நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.