ஜுன், ஜூலை மாதங்களுக்‍கான காவிரி தண்ணீரை தமிழகத்திற்கு உடனடியாகத் திறந்து விட வேண்டும் : கர்நாடக அரசுக்‍கு, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

Jun 27 2019 11:18AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்குரிய காவிரி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என, கர்நாடக அரசுக்‍கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-வது கூட்டம், அதன் தலைவர் திரு. மசூத் உசைன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில், தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் திரு. பிரபாகர், காவிரி தொழில்நுட்பக் குழு உறுப்பினர் திரு. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழகத்துக்கு ஜூன் மாதத்தில் வழங்க வேண்டிய 9 புள்ளி ஒன்று ஒன்பது TMC காவிரி நீரை, கர்நாடகா இதுவரை வழங்கவில்லை எனத் தெரிவித்த, தமிழக பிரதிநிதிகள், காவிரிப் படுகையில் புதிதாக எந்த ஒரு அணை கட்டுவதற்கும், கர்நாடகாவுக்‍கு அனுமதி அளிக்கக்‍ கூடாது என்றும் வலியுறுத்தினர்.

காவிரியில், நடுவர்மன்றத் தீர்ப்புப்படி, உரிய ஒதுக்கீட்டு நீரை தமிழகத்திற்கு கர்நாடகா திறந்துவிடாததால், தமிழகத்தின் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்க முடியவில்லை என்றும் தமிழக பிரதிநிதிகள் சுட்டிக்‍காட்டினர்.

இதனைத்தொடர்ந்து, காவிரியில் தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00