கர்நாடக அரசியலில் பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை - மக்களவையில் ராஜ்நாத்சிங் விளக்கம்
Jul 8 2019 4:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக அரசியல் நெருக்கடிக்கும், பா.ஜ.க.வுக்கும் தொடர்பில்லை என மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கார்நாடகாவில் நடைபெற்றுவரும், திரு.குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் பாரதிய ஜனதா கட்சி என காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்பிரச்சினை குறித்து விவாதிக்க வலியுறுத்தி, மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் திரு.அதிர் ரஞ்சன் சௌத்ரி, தலைமை கொறடா திரு. Kodikunnil Suresh ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கான நோட்டீஸ் அளித்தனர்.
மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், கர்நாடக அரசியல் நெருக்கடிக்கும், பா.ஜ.க.வுக்கும் தொடர்பில்லை என்றும், பாரதிய ஜனதா, ஒருபோதும் குதிரை பேரத்தில் ஈடுபட்டதில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.