தொழில் நுட்பக் கோளாறு காரணமாக, தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் - வரும் 22-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என அறிவிப்பு

Jul 19 2019 11:04AM
எழுத்தின் அளவு: அ + அ -

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம், வரும் 22-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO, சந்திரனை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 என்ற விண்கலத்தை கடந்த 2008-ம் ஆண்டு விண்ணுக்‍கு அனுப்பியது. நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை சந்திரயான்-1 உறுதி செய்தது. அதனைத்தொடர்ந்து, சந்திரனில் அடுத்தகட்ட ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கி உள்ளது. இந்தியாவின் GSLV Mk-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலத்தை, சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, கடந்த 15ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இறுதி நேரத்தில் விண்ணில் செலுத்தாமல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், சந்திரயான்-2 விண்கலம், வரும் 22-ம் தேதி, பிற்பகல் 2.33 மணிக்‍கு விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00