அயோத்தி நிலப்பிரச்னை தொடர்பான வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது இப்ராஹிம் கலிஃபுல்லா குழு
Jul 19 2019 11:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அயோத்தி நிலப்பிரச்னையை சமரசமாக தீர்க்க, முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில் அமைக்கப்பட்ட சமரசக் குழு, தனது இடைக்கால அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்டு மாதம் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அயோத்தி சர்ச்சைக்குரிய நிலப் பிரச்னையை சமரசமாக தீர்த்துக்கொள்ள, முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில் 3 பேர் அடங்கிய குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த குழு, நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், பிரச்னைக்கு, விரைந்து தீர்வு காணக்கோரி, மேலும் ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இதையடுத்து, சமரசக் குழு, இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான சமரசக் குழு, தனது இடைக்கால அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் இன்று தாக்கல் செய்தது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்டு மாதம் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சமரசக்குழு, ஜூலை 31ம் தேதி வரை, தங்களுடைய விசாரணை தொடர்பான விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.