2018-19-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவதற்கான அவகாசம் வரும் 31-ம் தேதியுடன் நிறைவு
Jul 18 2019 4:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை, அபராதமின்றி தாக்கல் செய்வதற்கான அவகாசம் இம்மாதம் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.
தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்ட நிலையில், 2018-2019ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இம்மாதம் 31ம் தேதியுடன் முடிகிறது. இதற்கு பின் வருமான வரி தாக்கல் செய்வோர் அபராதம் செலுத்த வேண்டும். ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுவோர் ஆயிரம் ரூபாயும், 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுவோர் 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் செலுத்த வேண்டும்.