சட்டப்பேரவையில், இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும் - முதலமைச்சர் குமாரசாமிக்‍கு, சபாநாயகர் அறிவுறுத்தல் - கர்நாடகாவில் உச்சக்‍கட்ட அரசியல் பரபரப்பு

Jul 23 2019 5:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடக சட்டப்பேரவையில், இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும் என, முதலமைச்சர் குமாரசாமிக்‍கு, சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர். இதனையடுத்து முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என சட்டப்பேரவையில் குமாரசாமி அறிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த, மேலும் இரு நாட்கள், ஆளும் அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. ஆனால், சபாநாயகர் அவகாசம் அளிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவை நேற்று தொடங்கியது முதல், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாக தள உறுப்பினர்கள் இடையே கடும் மோதல் நீடித்தது. கடும் அமளியுடன் - கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையை இன்று காலை 10 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் திரு. ரமேஷ்குமார் அறிவித்தார். மேலும், இன்று மாலை 6.00 மணிக்குள், நம்பிக்‍கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதனால் கர்நாடக அரசியலில் உச்சக்‍கட்ட அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00