மக்களவைத் தேர்தலில், நாடு முழுவதும் 8 இயந்திரங்களில் மட்டுமேகோளாறு ஏற்பட்டதாக தேர்தல் ஆணையம் தகவல் - 51 வாக்குகள் மட்டுமே, ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களுடன் பொருந்தவில்லை என்றும் விளக்கம்
Jul 24 2019 11:13AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், நாடு முழுவதும் வெறும் 8 இயந்திரங்களில் மட்டுமேகோளாறு ஏற்பட்டதாகவும், 51 வாக்குகள் மட்டுமே, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் இடையே பொருந்தவில்லை என்றும் இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவரும் நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் வெறும் 8 இயந்திரங்களில் மட்டுமே கோளாறு ஏற்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 26 ஆயிரத்து 687 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களுடன், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் சரிபார்க்கப்பட்டதாகவும், அதில் 51 வாக்குகள் மட்டுமே பொருந்திப் போகவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதுவும், இயந்திரங்களின் தவறு அல்ல என்றும், தேர்தல் பணியாளர்கள் செய்த தவறே என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இந்த கோளாறு, தேர்தல் முடிவுகளை எந்த வகையிலும் பாதிக்காது என்றும் தெரிவித்துள்ளது.