மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் களைக்கட்டிய புதுச்சேரி கலைவிழா : பார்வையாளர்களை கவர்ந்த ஒடிசா பழங்குடியினர் நடனம்
Aug 19 2019 12:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காரைக்கால் கலைவிழாவில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், ஒரிசா கலைஞர்களின் பழங்குடியின நாட்டுப்புற கலைநிகழ்ச்சி, சிலம்பாட்டத்துடன் கூடிய நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில், தஞ்சை தென்னக கலைப் பண்பாட்டு மையம் மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில், புதுச்சேரி கலைவிழா நேற்று முன் தினம் துவங்கியது. காரைக்கால் காமராஜர் திடலில் துவங்கிய நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், மயிலாட்டம், நாட்டிய நாடகம், ஒயிலாட்டம், வெண்ணிலா குழுவினர் தப்பாட்டம், சிலம்பத்துடன் கூடிய நடனம், ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து, பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்தபடி, பாரம்பரிய உடை அணிந்து, நடனமாடும், ஒடிசா பழங்குடியின மக்களின் நடனம் பார்வையாளர்களிடம் வரவேற்பை ஏற்படுத்தியது. ஏராளமான பார்வையாளர்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.