மகாராஷ்டிர மாநிலத்தில் பேருந்தும் லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழப்பு - 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
Aug 19 2019 1:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாராஷ்டிரா மாநிலத்தில் அரசு பேருந்தின் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் உள்ள ஷஹடா-தொண்டைச்சா சாலையில் நேற்றிரவு அவுரங்காபாத் நோக்கி அரசுப்பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரில் வந்த கண்டெய்னர் லாரி திடீரென பேருந்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இந்த இரு வாகனங்களின் ஓட்டுநர்கள் உள்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 35 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.