ஆர்.டி.ஒ. அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை : கடமையை சரிவர செய்யாவிட்டால் அடி வாங்க நேரிடும்
Aug 19 2019 1:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆர்.டி.ஒ. அதிகாரிகள் கடமையை சரிவர செய்யாவிட்டால், பொதுமக்களிடம் அடி வாங்க நேரிடும் என்று மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்ட்ர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தான், அவர்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோல, அரசின் சேவகர்களான ஆர்.டி.ஒ. அதிகாரிகளும், மக்களுக்கு நேரடியாக பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் என்று கூறினார். குறிப்பிட்ட நாட்களுக்குள் பொதுமக்களின் குறைகளை தீர்க்காவிட்டால், சட்டம் ஒழுங்கை கையில் எடுத்துக் கொண்டு அந்த அதிகாரிகளை அடித்து உதைக்குமாறு பொதுமக்களிடம் கூறுவேன் என்று எச்சரிக்கை விடுத்தார். கட்கரியின் இந்த சர்ச்சை பேச்சு சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.