கர்நாடகாவில் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் : போலீசார் விசாரணை - கார் ஓட்டுநர் கைது
Aug 19 2019 2:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகாவில் குடிபோதையில் காரை ஓட்டிவந்து நடைபாதையில் சென்றவர்கள் மீது ஏற்றிய நபர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கார் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த கார் சாலையோரம் திரும்பி அங்கிருந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதி விட்டு பின்னர் அருகில் இருந்த நடைபாதையில் சென்றவர்கள் மீதும் மோதியபடி நின்றது. இதில் நடைபாதை கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தோர், அந்த வழியே நடந்து சென்றோர் என 15-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். தொடர்ந்து காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தை அடுத்து கார் ஓட்டுநரை கைது செய்த போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.