ரஃபேல் விமானங்களை வாங்க மத்திய அரசு பிரான்ஸ் நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் - அடுத்த மாதம் முதல்கட்டமாக 4 விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு
Aug 22 2019 10:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஃபிரான்சிடம் கொள்முதல் செய்யும் ரஃபேல் போர் விமானங்களில் முதல் கட்டமாக, 4 விமானங்கள் அடுத்த மாதம் 20-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படப்பட உள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
ஃபிரான்ஸ் நாட்டு நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் பேர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக செப்டம்பர் மாதம் இந்தியாவிடம் விமானங்கள் ஒப்படைக்கப்பட உள்ளதாக இந்தியாவுக்கான ஃபிரான்ஸ் தூதர் அலெக்சாண்டர் தெரிவித்திருந்தார். முதல் கட்டமாக 4 விமானங்கள், அடுத்த மாதம் 20-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், பாதுகாப்பு துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா ஆகியோர் பங்கேற்கின்றனர். மற்ற விமானங்கள் அடுத்த ஆண்டு மே மாதம் முதல் வரத்தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.