15 ஆயிரம் ஊழியர்களுடன் அமேசான் வர்த்தக மையம் : ஐதராபாத்தில் உலகளவிலான மிகப்பெரிய கட்டிடம் திறப்பு
Aug 22 2019 12:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
15 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றும் வகையில், அமேசான் நிறுவனத்தின் மிகப்பெரிய வர்த்தக மையக் கட்டிடம் ஐதராபாத்தில் திறக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அமேசான். தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி மிகப்பெரிய வர்த்தக மையத்தை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இதில், அலுவலகம் மட்டும் 18 ஆயிரம் சதுர அடி கொண்டது. இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதை தொடர்ந்து திறப்புவிழா நடைபெற்றது. இதில் அந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தியாவில் மட்டும் 62 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றும் அமேசான் நிறுவனத்தில், ஐதராபாத்தில் உள்ள இந்த புதிய மையத்தில் மட்டும் 15 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுவார்கள். ஒரே இடத்தில் அமேசான் நிறுவனம் கட்டியுள்ள உலகளவிலான மிகப்பெரிய கட்டிடம் இது என்பது குறிப்பிடத்தக்கது.