ஒடிசாவில் கர்ப்பிணியை கட்டிலில் 12 கி.மீ. தூரம் சுமந்த உறவினர்கள் : ஆம்புலன்ஸ் செல்ல சாலைகள் இல்லாததால் அவலம்
Aug 22 2019 3:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒடிசாவில் கர்ப்பிணி பெண்ணை, சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் 12 கிலோ மீட்டர் தூரம் கட்டிலில் சுமந்து சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.
ஒடிசாவில், Kalahandi மாவட்டத்தின் Nehala கிராமத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், கிராமத்திற்கு முறையான சாலைகள் இல்லாததால், ஆம்புலன்ஸ் வரமுடியாத சூழல் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வசதியை பெற வேண்டுமெனில் அந்த கிராமத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள Kaniguma நகரை வந்தடைய வேண்டும். இதனால் அவரது உறவினர்கள், கர்ப்பிணியை கட்டிலில் படுக்க வைத்தபடி தோளில் சுமந்து கொண்டு, 12 கிலோ மீட்டர் தொலைவை கடந்து Kaniguma நகரை அடைந்தனர். வழியில் உள்ள Jelingadhora ஆற்றையும் அவர்கள் கடந்து சென்றது குறிப்பிடதக்கது.