ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை - நாட்டு மக்களை திசைத்திருப்பும் முயற்சி - காங்கிரஸ் கடும் விமர்சனம்
Aug 22 2019 7:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திரு.ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை என்றும், நாட்டு மக்களை திசைத்திருப்பும் முயற்சி என்றும் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
Roll Visuals
திரு.ப.சிதம்பரம் கைது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திரு.சுர்ஜிவாலா, டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். சிதம்பரத்தின் கைது, மத்திய அரசின் ஜனநாயக படுகொலை என்று தெரிவித்த அவர், தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைக்காக சி.பி.ஐ-யை மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார். சிதம்பரத்தின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இல்லை என்றும், அவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவே குற்றவாளியை போல கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நாட்டு மக்களை திசைத்திருப்பும் முயற்சி என்றும் சுர்ஜிவாலா கடுமையாக விமர்சித்தார்.