பிரிவினை சக்திகளை எதிர்த்து காங்கிரஸ் கட்சி வலிமையுடன் போராடும் - சோனியாகாந்தி திட்டவட்டம்​

Aug 23 2019 4:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரிவினை சக்திகளை எதிர்த்து காங்கிரஸ் கட்சி வலிமையுடன் போராடும் என்று அக்கட்சியின் தலைவர் திருமதி. சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 75-வது பிறந்த நாள் விழா டெல்லியில் கொண்டாடப்பட்டது. விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியாகாந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம் என தெரிவித்தார். மத்தியில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்து ராஜீவ்காந்தி பிரதமராக பொறுப்பேற்றபோது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மக்களின் அடிப்படை உரிமைக்கும், ஜனநாயகத்திற்கும் ஆபத்து ஏற்படுத்தும் சூழலை உருவாக்கவில்லை என்றார். வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் என்ற மந்திரத்தை ராஜீவ்காந்தி அளித்துள்ளதாக கூறிய சோனியாகாந்தி, பிரிவினை சக்திகளை எதிர்த்து காங்கிரஸ் வலிமையுடன் போராடும் என தெரிவித்தார். இந்த விழாவில் முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன்சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு. ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் திருமதி. பிரியங்கா காந்தி, மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00