ப. சிதம்பரத்தின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்‍கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு -வழக்‍கு விசாரணை, வரும் திங்கட்கிழமைக்‍கு ஒத்திவைப்பு

Aug 23 2019 1:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

INX மீடியா முறைகேடு வழக்‍கில் முன்ஜாமீன் கேட்டு, முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ப.சிதம்பரம் தாக்‍கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, வரும் திங்கட் கிழமைக்‍கு ஒத்தி வைக்‍கப்பட்டுள்ளது.

INX மீடியா வழக்கில் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து அவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி, அயோத்தி வழக்கில் இருந்ததால், இந்த மனு இன்று எடுத்துக்‍ கொள்ளப்படுவதாக தெரிவிக்‍கப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்‍கு நீதிபதி பானுமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த மனுக்கள் ப.சிதம்பரத்தின் கைதுக்கு முன்பு முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டவை என சுட்டிக்காட்டினார். அரசுத் தரப்பு வாதத்திற்கு ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் ஆட்சேபம் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதனிடையே, திரு. ப.சிதம்பரத்தை, சி.பி.ஐ. காவலில் எடுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்‍கும், வரும் திங்கட் கிழமைக்‍கு ஒத்தி வைக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00