தொழில் முனைவோருக்கு உள்ள தடைகளை தகர்த்து வேலைவாய்ப்பை அதிகரிக்க அரசுகள் உதவ வேண்டும் : இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி வலியுறுத்தல்
Aug 23 2019 11:16AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்களுடனான மத்திய, மாநில அரசுகளின் நெருக்கம் அதிகமாக வேண்டும் என்றும், தொழில் முனைவோருக்கு உள்ள தடைகளை தகர்த்து வேலைவாய்ப்பை அதிகரிக்க அரசுகள் உதவ வேண்டும் என்றும் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய இன்போசிஸ் நாராயணமூர்த்தி, உலகின் மென்பொருள் மேம்பாட்டு மையமாக இந்தியா மாறியுள்ளதாக கூறினார்.
நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க, தொழில் முனைவோருக்கு உள்ள தடைகளை மத்திய, மாநில அரசுகள் நீக்க வேண்டும் என்றும், மக்களுடனான அரசுகளின் நெருக்கம், மேலும் அதிகமாக வேண்டும் என்றும் திரு. நாராயணமூர்த்தி வலியுறுத்தினார்.
'மேரா பாரத் மகான்' அல்லது 'ஜெய் ஹோ' என்று கூச்சலிடுவது எளிதானது என்றாலும், அதற்கான மதிப்புகளைக் கடைப்பிடிப்பது கடினம் என்றும் தெரிவித்த அவர், சாதி, மதம் மற்றும் மாநிலம் கடந்து, இந்தியர்களாக நம்மை அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.