இந்திய ஊக்க மருந்து ஆய்வகத்தின் அங்கீகாரம் 6 மாதத்திற்கு ரத்து - சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சியின் விதிமுறைகளை பின்பற்றாததால் நடவடிக்கை
Aug 23 2019 6:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சி, இந்திய ஊக்க மருந்து ஆய்வகத்தின் அங்கீகாரத்தை 6 மாதத்திற்கு ரத்து செய்துள்ளது.
சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சியை சேர்ந்த நிபுணர்கள், கடந்த மே மாதம் தேசிய ஊக்க மருந்து ஆய்வகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, சர்வதேச ஊக்கமருந்து ஆய்வகங்களுக்கு விதிக்கப்பட்ட அளவீடுகளை பூர்த்தி செய்யாததால், இந்திய ஊக்க மருந்து ஆய்வகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நீக்கம், கடந்த 20-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த தடை காலத்தில், எந்தவித ஊக்கமருந்து சோதனையும் இந்திய ஆய்வகத்தில் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் மாதிரிகளை சேகரித்து, அங்கீகாரம் பெற்ற மற்ற ஊக்கமருந்து ஆய்வகங்களில் சோதனைக்கு அளிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் விதிக்கப்பட்டுள்ள நீக்கத்தால், இந்தியாவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த நீக்கத்தை எதிர்த்து, சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தை நாடலாம் என மூத்த வழக்கறிஞர் பர்த் கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.