கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு - அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 72 ரூபாய் 3 காசுகளாக வீழ்ச்சி
Aug 23 2019 5:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று கடும் சரிவை சந்தித்தன. 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாய் மதிப்பும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை சரிவுடன் தொடங்கின. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத சரிவாக கூறப்படுகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 346 புள்ளிகள் சரிந்து, 36 ஆயிரத்து 127 புள்ளிகளாகவும், தேசிய பங்குசந்தை நிஃப்டி 94 புள்ளிகள் குறைந்து 10 ஆயிரத்து 647 புள்ளிகளாகவும் இருந்தன. உலகளவில் பொருளாதார மந்தநிலை மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு போன்றவற்றால் பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கட்டுமானம், உலோகம், மோட்டார் வாகனம், பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைப் பங்குகள் இன்று சரிவைச் சந்தித்தன. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இன்று 22 காசுகள் குறைந்து 72 ரூபாய் 3 காசுகளாக இருந்தது.