நாட்டின் பொருளாதாரம் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் குற்றச்சாட்டு - உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு எதிராக, மத்திய அரசு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பதாக வேதனை
Aug 23 2019 6:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டின் பொருளாதாரம் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும், உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு எதிராக, மத்திய அரசு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பதாகவும், காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. கபில் சிபல் குற்றம்சாட்டினார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ப.சிதம்பரத்திற்கு 5 நாட்கள் சிபிஐ காவல் விதிக்கப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு, சிபிஐ மற்றும் அமலாத்துறை அமைப்பு, அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது.
மத்திய அரசின் கைப்பாவையாக சிபிஐ உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகள் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் வழக்கறிஞர் திரு.கபில் சிபல், நாட்டு மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு எதிராக, மத்திய அரசு, லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பதாக விமர்சித்தார்.
நாட்டின் பொருளாதாரம் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும், பிரச்னைகளை திசைத்திருப்பவே, இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு எடுப்பதாகவும் கபில் சிபல் குற்றம்சாட்டினார்.