மேற்குவங்கத்தில் கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலி - தலா ரூ.5 லட்ச இழப்பீடு வழங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவு
Aug 23 2019 12:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்கு வங்க மாநிலத்தின் 24 பர்கானா மாவட்டத்தில், கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலம் 24 பர்கானா மாவட்டத்தின் கச்சுவா பகுதியில் உள்ள கோவில் ஒன்றில், கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். மிகவும் பழமையான அக்கோவிலின் மதில் சுவர் மழை காரணமாக ஏற்கனவே பலவீனமடைந்திருந்த நிலையில், திடீரென இடிந்து விழுந்தது. இதில், இடிபாடுகளில் சிக்கி 4 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஏராளமானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கி மேற்கு வங்க முதல்வர் செல்வி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.