கடந்த 70 ஆண்டுகளில், நாடு இது போன்ற பணப்புழக்க சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை - நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் பேச்சு
Aug 23 2019 1:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடந்த 70 ஆண்டுகளில், நாடு இது போன்ற பணப்புழக்க சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை எனவும், முழு நிதித் துறையும் சிக்கலில் உள்ளது எனவும், நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர், திரு. ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில், நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், நிதி ஆயோக் துணைத் தலைவர் திரு. ராஜீவ் குமார் பங்கேற்றுப் பேசினார். தனியார் துறையின் அச்சங்களை போக்க, மத்திய அரசு தன்னால் முடிந்தவற்றை செய்ய வேண்டும் எனவும், நிதித் துறையில் பிரச்சனை உள்ளது என்பதை அரசு முற்றிலும் அங்கீகரிக்கிறது எனவும் தெரிவித்தார்.
மேலும், 70 ஆண்டுகளில், இது போன்ற பணப்புழக்க சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை என்றும், இதை, மத்திய அரசு சரி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
சந்தையில், ஒருவர் மற்றொருவரை நம்பவில்லை எனவும், இது பொது துறையில் மட்டுமல்ல, தனியார் துறையிலும் உள்ளதாகவும், திரு. ராஜீவ் குமார் தெரிவித்தார்.