புதுச்சேரியில் கண்ணை கட்டிக்கொண்டு ஓவியம் வரைந்து 5 வயது சிறுவன் அபாரம்
Aug 23 2019 5:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில், கண்ணை கட்டிக்கொண்டு புள்ளிகள் மூலம் ஓவியம் வரைந்து 5 வயது சிறுவன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளான்.
புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்த பிரபு - சங்கரி தம்பதியரின் 5 வயது மகன் சாய்பிரணவ், தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறான். இச்சிறுவன், கண்ணை மூடிக்கொண்டு புள்ளிகள் மூலம் ஓவியங்களை வரைந்து சாதனை புரிந்துள்ளான். சிறுவனது இந்த சாதனை Assist world record மற்றும் பாண்டிச்சேரி புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம்பெற்றுள்ளன.